You are currently viewing tamil thevdiya Kathaikal அபி என்கிற அரிப்பெடுத்த அழகு பிசாசு! -2

tamil thevdiya Kathaikal அபி என்கிற அரிப்பெடுத்த அழகு பிசாசு! -2

tamil thevdiya Kathaikal

அபி அதற்கெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் ஓவர் மூடாகி, என் கையை அவளுடைய இடுப்பில் தவழ விட்டபோதுதான், என் மண்டையில் நறுக்கென்று குட்டினாள்.

இன்டர்வெல் வந்தது. வெளியே வந்தோம்.

அபி, “எனக்கு பாப்கார்னும் பெப்ஸியும் வாங்கு. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்..!!” என்று சொல்லிவிட்டு, பெண்கள் ரெஸ்ட் ரூம் பக்கம் செல்ல, நான் கும்பலில் அடித்துப் பிடித்து, இரண்டு பாப்கார்ன், இரண்டு பெப்சி வாங்கினேன்.

எல்லாவற்றையும் கையில் பிடிக்க முடியாமல் பிடித்தபடி திரும்பிய நான், ஒரு வளர்ந்து கெட்டவனின் முகத்திலேயே முட்டிக் கொண்டேன்.

நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, அந்த வளர்ந்து கெட்டவன் வேறு யாரும் இல்லை. சாட்சாத் அந்த “சசி” பரதேசிதான்..!!

என்னைப் பார்த்ததும், “டொய்ங்ங்ங்..” என்று கண்களை விரித்து அதிர்ச்சியானான். நானும்தான்..!!

“டேய், டிசன்ட்ரின்னு சொன்ன, இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று அவன் கேட்க, “அ.. அது.. அ.. அது..” என்று திணறுவதை தவிர என்னால் உருப்படியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

அதற்குள், “என்னடா, வாங்கிட்டியா..?” என்று கேஷுவலாக கேட்டவாறு, இந்த அபி பிசாசும் அங்கே வந்து சேர்ந்தாள். தன் அண்ணனை பார்த்ததும் பக்கென்று அதிர்ச்சியானாள்.

ஓரிரு விநாடிகள்தான். அப்புறம் “ம்ஹ்ம்..” என்று தலையை சிலுப்பியவாறு, முகத்தை அலட்சியமாக எங்கேயோ திருப்பிக் கொண்டாள்.

சசி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து, ஒரு கேவலமான லுக் விட்டான்.

அப்புறம் ஓரக்கண்ணால் அவனுடைய தங்கையை பார்த்துக்கொண்டே, என்னிடம் நக்கலான குரலில் கேட்டான், “ஓஹோ..!! இதுதான் அந்த டிசன்ட்ரியா..?”

அவனுடைய நக்கல் அபியை சூடாக்கியது.

“என்னது..?” என்றவாறு திரும்பி, தன் அண்ணனை முறைத்தாள்.

அவன் கண்டுகொள்ளாமல் என்னிடம் சொன்னான், “ஏண்டா, இவ கூட சேர்ந்து ஊர் சுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்..? அடங்க மாட்டியா நீ..?”

“இ.. இல்லைடா மச்சான். நான் சொன்னேன்.. அபிதான்..” என்று நான் இழுக்க, “இப்போ எதுக்கு அவனை மிரட்ற..? நாங்க ரெண்டு பெரும் ஊர் சுத்துனா, உனக்கு என்ன எரியுது..?” என்று, அபி தன் அண்ணனிடம் பொரிந்து தள்ளினாள்.

“இங்க பாரு, நான் உன்கிட்ட பேசலை. என் பிரண்ட்கிட்ட பேசுறேன்..!!” என்று சசி, தன் தங்கையை முறைத்தபடி சொன்னான்.

“ஏன்..? எங்கிட்ட பேசு..!!” என்று கோபத்தில் கத்தினாள் அபி.

“உன்கிட்ட மனுஷன் பேச முடியாது..!!” என்று பதிலுக்கு கத்தினான் சசி.

“மனுஷந்தான பேச முடியாது..? நீ பேசு..!!” என்று அபி உக்கிரமானாள்.

“ஓவரா பேசாதடி..!! வீட்ல ஸ்பெஷல் க்ளாஸ்னு பொய் சொல்லிட்டு, இவன்கூட என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று சசியும் உக்கிரமாக, “நீ மட்டும் என்ன..? இன்டர்வியூன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..?” என்று சொல்லி அவனை மடக்கினாள் அபி.

சசி திணறினான்.

“உனக்கு திமிரு ஜாஸ்தியாயிடுச்சுடி. உன் லவ் மேட்டரை டாடிகிட்ட போட்டுக் குடுக்குறனா, இல்லையா பாரு..!!” என்று என் வயிற்றில் புளி கரைத்தான்.

அனால் அபி சற்றும் அசரவில்லை.

“போ. போய் போட்டுக்குடு. நானும் போட்டுக் குடுக்குறேன்..!!” என்று அவனுக்கு பதிலடி கொடுத்தாள்.

“நீ என்ன போட்டுக் குடுப்ப..?”

“ம்ம்ம்.. நீ தம்மடிக்கிறது.. தண்ணியடிக்கிறது.. அப்புறம் காலேஜ் டூர் அப்போ, கைல காசு வச்சுக்கிட்டு ப்ராஸ்டிட்யூட்டுக்காக அலைஞ்சது. அதெல்லாம் நான் டாடிகிட்ட போட்டுக் குடுக்குறேன்..!!” என்று அபி கண்களை உருட்டி கோபமாக கத்த, சசி மிரண்டு போனான்.

அதிர்ச்சியாய் அவள் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தான். அப்புறம் அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் கோபமாய் மாறியது. அந்த முகத்தை அப்படியே திருப்பி, என்னை முறைத்தான்.

நான் தலையை தொங்கப் போட்டுக்கொண்டேன்.

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சசியின் இந்த சீக்ரட் எல்லாம் என் மூலம்தான் அபிக்கு போயிருக்கும் என்று அவன் புரிந்துகொண்டான் என்று எனக்கு புரிந்து போனது.

தங்கையை அப்படியே வெறுப்பாக பார்த்த சசி, பின்பு பார்வையை விலக்காமலே என்னிடம் சொன்னான்.

“ஏண்டா, இப்படி ஒருத்தி தேவையா உனக்கு..?” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே, “என்னது..?” என்று அபி ரவுத்திரமானாள்.

“முறைக்காத. நான் இவன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நீ உள்ள போறியா..?” என்றான் சசி.

“என்ன பேசப் போற..?”

“இது பசங்களுக்குள்ள மேட்டரு.. நீ கெளம்பு..!!” என்று சசி சொல்ல, அபி தன் அண்ணனையே கொஞ்ச நேரம் முறைத்தபடி நின்றிருந்தாள்.

அப்புறம் என் கையில் இருந்த, பாப்கார்ன் பெப்சி எல்லாம் வாங்கிக்கொண்டு, கடுகடுப்பான குரலில் என்னிடம், “படம் ஆரம்பிச்சுடுவான். சீக்கிரம் வந்து தொலை. வளவளன்னு பேசிட்டு இருக்காத..!!” என்று சொன்ன அபி அந்தப் பக்கம் நகர, சசி இந்தப் பக்கம் என் கையை பிடித்து இழுத்து சென்றான்.

தியேட்டரின் பக்கவாட்டில் நடந்து சென்று அங்கே இருந்த கதவை திறந்து வெளியேற, திறந்த வெளியில் தம்மடித்துக்கொண்டு அங்கு ஒரு கூட்டமே நின்றிருந்தது.

சசி பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து என்னிடம் நீட்டினான். நான் பதறினேன்.

“வேணாம் மச்சான். அபிக்கு தெரிஞ்சா அடிப்பா..!!” என நான் மறுக்க, அவன் கடுப்பானான்.

“ஏய். ச்சீய் எடு..!! பொட்டச்சிக்குலாம் போய் பயந்துக்கிட்டு..!!” என்று நக்கலாக சொன்னான்.

நான் தயங்கி தயங்கி ஒரு தம் எடுத்து வாயில் வைத்துக்கொண்டேன். சசியும் தன் வாயில் ஒரு தம்மை பொருத்திக்கொண்டு, இரண்டு பேருக்கும் பற்ற வைத்தான்.

கண்களை லேசாக செருகி, புகையை வெளியே ஊதிக்கொண்டே, “நான் ஏன் உன்னை என் தங்கச்சி கூட ஊர் சுத்தக் கூடாதுன்னு சொல்றேன் தெரியுமா..?” என்று கேட்டான்.

“புரியுது மச்சான். நாலு பேர் பார்ப்பாங்க. உங்க குடும்ப மானம் போகும்..!!”

“நாலு பேர் பார்ப்பாங்கன்றது சரி. ஆனா குடும்ப மானத்துக்காக இல்லை..!!”

நான், “அப்புறம்..?” என்று குழப்பமாக கேட்க, அதற்கு அவன், “நாளைக்கு நீ என் தங்கச்சியை கழட்டி விடுறது கஷ்டமாயிடும்..!!” என்று கூலாக சொன்னான்.

“என்னடா மச்சான் சொல்ற..?”

“சீரியசாத்தாண்டா சொல்றேன். சீக்கிரம் அவளை கழட்டி விடுற வழியைப் பாரு. கூடப் பொறந்த அண்ணன் கூட எப்படி மல்லுக் கட்டிட்டு நிக்குறா பாத்தியா..? இப்படிப்பட்ட அடங்கா பிடாரி உனக்கு தேவையா..?”

“ச்சே.. ச்சே.. அபியை அப்படிலாம் சொல்லாதடா. ரொம்ப நல்ல பொண்ணு..!!”

“அடி செருப்பால..!! நல்ல பொண்ணாம்ல..? அழகா இருக்குறான்றதை தவிர, வேற என்னடா குவாலிபிகேஷன் இருக்கு அவகிட்ட..? அப்பா..!! இவ மாதிரி ஒரு டெரர்ர்ர்ரான கேரக்டரை நான் பாத்ததே இல்லை..!!”

“இருக்கலாண்டா. ஆனா என்னை சின்சியரா லவ் பண்றா..!!”

“கிழிச்சா..!! அவ ஏன் உன்னை லவ் பண்றா தெரியுமா..? அவ சொன்னதுக்குலாம் நீதான் பூம் பூம் மாடு மாதிரி. நல்லா தலையை ஆட்டுவ..!! மத்தபடி உன்மேல ஒன்னும் தெய்வீக லவ்வுலாம் கிடையாது..!!”

அவன் சொன்னதைக் கேட்டதும், எனக்கு வயிற்றில் புளி கரைப்பது மாதிரி இருந்தது.

எப்படியோ சமாளித்துக்கொண்டு, “என்னடா. என்னென்னவோ சொல்ற..?” என்றேன்.

“மச்சான், எல்லாம் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். இப்போவே உஷார் ஆயிக்கோ..!! இவளை மட்டும் கட்டிக்கிட்டேன்னு வச்சுக்கோ, நல்லா பளபளன்னு எவர்சில்வர்ல ஒரு கூஜா வாங்கிக் கொடுப்பா. அதை தூக்கிக்கிட்டு, இவ பின்னாலேயே திரிய வேண்டியதுதான்..!! உன் லைஃபே நாசமாப் போயிடும்..!!”

“நெஜமாவாடா..?”

“ஆமாண்டா. நான் சொல்றதை கேளு. அவள கழட்டி விட்ரு. நமக்கென்ன மச்சான் பொண்ணா கிடைக்காது..? நம்ம ரேஞ்சுக்கு எல்லாம் க்யூல நிப்பாளுகடா. நான் சொல்றதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்..!! நல்லா யோசிச்சுக்கோ. கழட்டிவிட ஐடியா வேணும்னா எங்கிட்ட வா. எப்படி நேக்கா கழட்டி விடுறதுன்னு நான் ப்ளான் போட்டுத் தர்றேன். சரியா..?”

சசி அதே ரேஞ்சில் ஒரு பத்து நிமிடம் பேசினான். என்னை நன்றாக குழப்பி விட்டான்.

“அவன் சொல்வதிலும் உண்மை இருக்குமோ..?” என்று யோசனை ஓடியது.

அப்புறம் நான் ரெஸ்ட் ரூம் போய், நன்றாக வாயை கொப்புளித்து, பபுள்கம் போட்டுக்கொண்டு, நல்ல பிள்ளையாய் அபியின் பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.

அவள் என்னுடைய பாப்கார்னையும், பெப்சியையும் என் கையில் திணித்தவாறே, “என்ன பேசுனீங்க ரெண்டு பேரும்..?” என்று ரகசியமான குரலில் கேட்டாள்.

“ஒன்னும் இல்லையே..!!” என்றேன் ஒன்றும் நடக்காதவன் போல..!!

“நடிக்காத. தனியா கூட்டிட்டு போய் கால் மணி நேரம் பேசியிருக்கான். என்னைப் பத்தித்தான் ஏதாவது சொல்லியிருப்பான். என்ன சொன்னான்..? சொல்லு..”

“அவன் கெடக்குறான் விடு அபி..”

“இப்ப சொல்லப் போறியா இல்லையா..?”

“அவன் ஏதாவது சொல்லுவான். நமக்கெதுக்கு அபி..? தேவையில்லாதது..!!”

“தேவையா இல்லையான்னு நான் டிஸைட் பண்ணிக்கிறேன். நீ மேட்டரை மட்டும் சொல்லு..!!” என்று அபி கொக்கிப்பிடியாய் கேட்க, நான் அவஸ்தையில் நெளிந்தேன்.

tamil thevdiya Kathaikal அபி என்கிற அரிப்பெடுத்த அழகு பிசாசு! -2

“அது.. அது..”

“என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்காத. மவனே, உண்மையை சொல்லு..!!”

“அவன்.. அவன்.. உன்னை..”

“ம்ம்.. என்னை..?”

“உ.. உன்னை கழட்டி விட சொல்றான் அபி..!!” என்று உளறிக் கொட்டினேன்.

அபி கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். அப்புறம் கிண்டலான குரலில், “ஏன்..? எதுக்காம்..?” என்று கேட்டாள்.

“நீ.. நீ..”

“ம்ம்.. சொல்லு..”

“நீ அடங்காப் பிடாரியாம். வாயாடியாம்..!! உன்னை கட்டிக்கிட்டா வாழ்க்கையே நாசமா போயிடுமாம்..!!”

“அப்டின்னு அந்த லூசு சொல்லிச்சா..? சரி அதை விடு. அதுக்கு நீ என்ன சொன்ன..?”

“நான்.. நான்.. ஒன்னும் சொல்லலை. அப்டியே சிரிச்சிட்டே வந்துட்டேன்..!!” என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே, அபி என் தொடையைப் பிடித்து “முறுக்கக்..” என்று திருகினாள்.

சுள்ளென்று உயிர் போவது மாதிரி வலிக்க, நான் துடித்தேன். “ஆஆஆ..” என்று கத்திவிட்டேன். பக்கத்து சீட்டில் இருந்தவன் பரிதாபமாக என்னை திரும்பி பார்த்தான்.

நான் கோபமாக, கிசுகிசுப்பாக அபியிடம், “ஏண்டி கிள்ளுற..? வலிக்குது..!! அம்மா..!!” என்றேன்.

“கிள்ளாம..? அவன் உளறுனானாம், இவரு “ஈஈஈஈ”ன்னு இளிச்சுட்டு வந்தாராம். “நான் அபியைத்தான் லவ் பண்றேன். அவளைத்தான் கட்டிப்பேன்..!!”ன்னு அவன் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றதுக்கு என்ன..? ம்ம்ம்..? இரு. படம் முடியட்டும், உன்னை வச்சுக்குறேன்..!!” என்று அபி கோபமாக சொல்லிவிட்டு, திரை மீது பார்வையை வீசினாள்.

நான் கொஞ்ச நேரம் என் தொடையை தடவிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். “இப்படி அண்ணனிடமும், தங்கையிடமும் மாட்டிக்கொண்டு படாதபாடு படுகிறோமே..!!” என்று கவலையாக இருந்தது.

பாப்கார்ன், பெப்ஸி சாப்பிட்டேன். புரியாவிட்டாலும் நானும் கொஞ்ச நேரம் படம் பார்த்தேன்.

அப்புறம் “அது” நினைவுக்கு வந்தது. நைசாக அபியின் புஜத்தை சுரண்டினேன்.

“அபி..!!” என்றேன்.

“ம்ம்..?”

“இன்டர்வெலுக்கு அப்புறம் இன்னொன்னு தர்றேன்னு சொன்னியே. இன்னும் தரலை..?”

“ம்ம்.. தரலாம்னுதான் நெனைச்சேன். ஷூ மாட்டிட்டு வந்துட்டமேன்னு யோசிக்கிறேன். செருப்பு மாட்டிட்டு வந்திருந்தா வசதியா இருந்திருக்கும்..!!”

அவ்வளவுதான்..!! அப்புறம் நான் வாயை இறுக்கி மூடிக்கொண்டேன். அவள் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறாள் என்று தெளிவாக எனக்கு புரிந்து போனது. அதனால் அதைப் பற்றி மூச்சு விடவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தோம். நான் பைக்கை எடுக்க பார்க்கிங் ஏரியா செல்ல, அபி என்னை பின் தொடர்ந்தாள்.

நான் எந்திரம் மாதிரி பைக்கை வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்ய, அபி அமைதியாக பின்னால் ஏறி அமர்ந்தாள்.

கிளம்பப்போகும்போது, அந்த படுபாவி சசி எதிரே வந்தான். ஒரு கையால் பைக்கை முன்னால் கை வைத்து தடுத்தபடி நக்கலாக, “அடுத்து எங்க..?” என்று கேட்டான்.

இப்போது அபி தன் அண்ணனை பார்த்து ஆத்திரமாக சீறினாள்.

“எங்க போனா உனக்கு என்ன..? மூடிட்டு போ..!!”

அவள் கத்தியதை கேட்டு சசி மட்டும் இல்லை, நானும் அரண்டு போனேன். ஆக்சிலரேட்டரை “கிர்ர்ர்ர்..” என்று முறுக்கினேன். தியேட்டரை விட்டு, மெயின் ரோட்டில் ஏறி வண்டியை செலுத்தினேன்.

எங்கே செல்வது என்றே தெரியவில்லை. சொன்னால்தானே..? ஆத்திரமாக வேறு இருக்கிறாள்..!! கேட்கலாமா..? வேண்டாமா..? என்று மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டுக்கொண்டது.

வேறு வழியில்லாமல், மனதை திடப் படுத்திக்கொண்டு, தயங்கி தயங்கி கேட்டேன். “எ.. எங்க போறது அபி..?”

“ரூமுக்கு போ..!!” என்று பட்டென்று பதில் வந்தது.

“எ.. எந்த ரூமுக்கு..?”

“ம்ம்ம்.. உன் ரூமுக்குத்தான்..!!”

“எதுக்கு..?”

“போன்னு சொன்னா போ..!!”

“பிசாசு..!! ராட்சசி..!! தேள் கொடுக்குக்கு பொறந்தவ..!! இவளை கட்டிக்கிட்டு நான் என்ன கஷ்டம்லாம் அனுபவிக்கப் போறேனோ..?” என்று மனசுக்குள் அந்த அழகு பிசாசை திட்டிக்கொண்டே, வண்டியை என் ரூம் நோக்கி விட்டேன்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் என் ரூமை அடைந்தோம்.

உள்ளே நுழைந்த அபி, என் ரூம் இருந்த நிலையை பார்த்துவிட்டு முகத்தை சுளித்தாள்.

ரூமை சுற்றி சுற்றி ஒரு கேவலமான பார்வை பார்த்தவள், “என்னடா..? ரூமை இவ்வளவு நாஸ்டியா வச்சிருக்க..?” என்றாள்.

“நீ வருவேன்னு எனக்கு தெரியுமா..? தெரிஞ்சிருந்தா கொஞ்சம் கிளீன் பண்ணிருப்பேன்..!!” என்றேன்.

அபி மெல்ல நடந்து சென்று தன் ஷோல்டர் பேக்கை கழட்டி டேபிள் மீது வைத்தாள். திரும்பி என்னை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்தாள்.

அவள் மனதில் என்ன நினைத்து வந்திருக்கிறாள் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை.

அதனால் குழப்பமாக, “எதுக்கு அபி திடீர்னு என் ரூமை பாக்கனும்னு ஆசை..?” என்று கேட்டேன்.

“சொல்றேன்..” என்றவள் என்னை நெருங்கினாள். என் கன்னத்தில் கைவைத்து தடவினாள். பின்பு மார்பில்.

அப்புறம் கொஞ்சம் கிறக்கமான குரலில் சொன்னாள், “ஷர்ட்டை கழட்டு அசோக்..!!”

“எதுக்கு..?”

“கழட்டுன்றேன்ல. பேசாம கழட்டு..!!” என்று சொன்னவள், என் சட்டை பட்டனில் கைவைத்து கழட்ட முயன்றாள்.

“ஐயோ..!! என்ன அபி இது..? உள்ள பனியன் கூட போடலை..!!” என்று நான் துள்ளினேன்.

“வசதியாப் போச்சு.. கழட்டு..!!” என்று சொல்லிக்கொண்டே, சட்டையின் முதல் பட்டனை அவளே கழட்டினாள்.

அவள் எதோ திட்டத்துடன்தான் வந்திருக்கிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என தோன்றியது.

மற்ற பட்டன்களை நானே கழட்டினேன்.

உடனே அவள், என் சட்டையை பிடித்து இழுத்து, என் கை வழியாக உருவி, தூக்கி எறிந்தாள். ஓரிரு வினாடிகள் என் வெற்று மார்பையே வெறித்தாள். கை வைத்து என் மார்புத் திரட்சியை தடவிக் கொடுத்தாள்.

“எதுக்கு சட்டையை கழட்ட சொன்ன..?” என்றேன்.

“சொல்றேன் இரு.. வா..!!” என்றவள், என்னுடைய கையை பிடித்து இழுத்து, கட்டிலுக்கு அழைத்து சென்றாள்.

என் தோளை பிடித்து அமுக்கியவாறு சொன்னாள், “ம்ம்.. படுத்துக்கோ..!!”

நான் எதுவும் புரியாமலேயே, மெல்ல மெத்தையில் சாய்ந்தேன். அபியை ஏறிட்டேன்.

PART 3 Tomorrow

Follow on Facebook

Leave a Reply